திறைசேரி அதிகாரியின் மரணத்தால் ஏற்பட்ட திருப்புமுனை! அநுர அரசின் பலவீனத்தால் பலமடையும் ராஜபக்சக்கள்
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம்,தற்போது பேசுபொருளாகியுள்ளது.
நிதியமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடியாக மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ச, கடந்த 30 ஆம் திகதி தனது வீட்டுத் தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
உயிரிழந்த நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை இன்று (02.05.2026) பிற்பகல் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில்,அநுர நல்லவர் என்று கூறிக்கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் சரியான பொறிமுறையை உருவாக்காவிட்டால் அந்த பட்டத்தை இழக்க நேரிடும்ட என்று சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒரு அதிகாரி ஊழல் செய்தால் அது அநுரவின் அரசு செய்கின்ற ஊழல் தான் என குறிப்பிட்டார்.
யாரோ ஒருவரின் லாபத்திற்காக இந்த விடயங்கள் நடைபெற்றுள்ளன. இன்னும் எத்தனை விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளதோ என்ற கேள்வியெழுந்துள்ளது என தெரிவித்தார்.
இது தொடர்பாக விரிவான விடயங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri