இலங்கையில் அடுத்த வார பயணக்கட்டுப்பாட்டு தளர்வு தொடர்பில் சந்தேகம் வெளியிடும் உபுல்
நாட்டில் எதிர்வரும் வாரம் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் சந்தேகம் இருப்பதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்று அச்சம் காரணமாக அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கையில் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் பயணக்கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் போதும், பயணத் தடையை நீடிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானத்தையும் இதுவரையில் எடுக்கவில்லை என அரசாங்க தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமது கருத்தை வெளிப்படுத்தும் போதே உபுல் ரோஹன குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ளபோதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் நிலை உள்ளது.
அதேவேளை நகர்பகுதிகளில் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளமையை அறியக்கூடியதாக இருக்கிறது.
இந்தநிலையில் எதிர்வரும் வாரம் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் சந்தேகம் உள்ளது.
எனவே மக்கள் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.