கடுமையான நிபந்தனைகளுடன் பயணத்தடை நீக்கப்பட வேண்டும் - உபுல் முக்கிய கோரிக்கை
கடுயைமான நிபந்தனைகளுடனேயே பயணத்தடை நீக்கப்பட வேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை நகைப்பிற்குரியதாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயணத்தடை அமுலில் ஏற்பட்டுள்ள தோல்விக்கு அதிகாரிகள் பொறுப்பு சொல்ல வேண்டுமெனவும், பல்வேறு சுற்று நிரூபங்கள் மூலம் பல்வேறு தரப்பினரும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21ம் திகதி பயணத்தடை நீக்கப்பட்டாலும் கடுமையான சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இந்த பயணத்தடை மற்றும் முடக்க முறைமை பயனற்றதாக மாறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்களை மட்டும் குறை சொல்ல முடியாது எனவும், அதிகாரிகள் பயணத்தடை முறையில் பல்வேறு துளைகள் காணப்படுவதாகவும் அதனையே மக்கள் பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் கொழும்பு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்... எங்கே பாருங்க போட்டோஸ் Cineulagam
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri