மீண்டும் வழமைக்கு திரும்பும் மலையக தொடருந்து சேவைகள்
நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த மலையக தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக தொடருந்து பாதையில் மண்மேடு மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தமையினால் மலையக தொடருந்து சேவையானது நேற்று (23.11.2023) நானுஓயா வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது.
தொடருந்து சேவை
இந்த நிலையில், பதுளை தொடருந்து நிலையத்தில் ஆரம்பமாகும் அனைத்து தொடருந்துகளும் நானுஓயா தொடருந்து நிலையத்தில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், தொடருந்து பாதையில் சரிந்த மண்மேடு மற்றும் பாறைகளை அகற்றும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதால் மலையகத்துக்கான தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri