தொடருந்து பயணச் சீட்டுகளுக்கு தட்டுப்பாடு! எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
தொடருந்து பயணச் சீட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
இந்த நிலையில் குறித்த பற்றாக்குறையை தீர்ப்பதற்காக, முன்னர் அச்சிடப்பட்டு பயன்படுத்தப்படாத பயணச்சீட்டுகளை பயன்படுத்துவதற்கு தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த விடயத்தை திணைக்களத்தின் வர்த்தக அத்தியட்சகர் வஜிர பொல்வத்த தெரிவித்துள்ளார்.

தென் பகுதி தொடருந்து பாதையில் பயணச்சீட்டுக்களுக்கு தட்டுப்பாடு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயன்படுத்தப்படாத தொடருந்து பயண சீட்டு
எனவே பயன்படுத்தப்படாத தொடருந்து பயண சீட்டுக்கள் சேவைக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொடருந்து ஆசனங்களை முன்கூட்டியே ஒதுக்கிக் கொள்வதற்கான கால எல்லை நீடிக்கப்படவுள்ளது.
தொடருந்து ஆசனங்களை ஒதுக்கிக் கொள்வதற்கான அதியுச்ச காலம் 14 நாட்களாக இருந்த நிலையில் தற்போது, அது 30 நாட்களாக நீடிக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவருக்கு வயது ஏறவே ஏறாதா? 40 வயதிலும் சுடிதாரில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி! Manithan
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam