தொடருந்து பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு! எதிர்வரும் 13ஆம் திகதி முதல் புதிய நடைமுறை
இலங்கையில் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் கொண்டு வரப்படும் புதிய நடைமுறை தொடர்பில் தொடருந்து பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டியே ஒதுக்கப்படும் ஆசனங்கள்
அதன்படி தொடருந்து ஆசனங்களை, முன்கூட்டியே ஒதுக்கிக் கொள்வதற்கான கால எல்லை நீடிக்கப்படவுள்ளது.
தொடருந்து ஆசனங்களை ஒதுக்கிக் கொள்வதற்கான அதியுச்ச காலம் 14 நாட்களாக உள்ளன.
அந்த கால எல்லை, 30 நாட்களாக நீடிக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொது மக்களின் கோரிக்கை
பொதுமக்களின் கோரிக்கைக்கு அமையவும், உயர்தர சேவையை வழங்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 13ஆம் திகதி முதல், தொடருந்து ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கான அதியுச்ச கால எல்லை 30 நாட்களாக நீடிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
