வடக்குக்கான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம் - பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
வடக்கிற்கான தொடருந்து சேவைகள் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண தொடருந்து நிலைய பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார்.
மஹவ முதல் ஓமந்தை வரையிலான தொடருந்து பாதையில் ஐந்து தொடருந்து பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் வடக்குக்கான தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டது.
அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தல்
இந்த நிலையில் தமிழ் - சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு, எதிர்வரும் 09ஆம் திகதி முதல் தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

தொடருந்து சேவைக்கான முற்பதிவுகள் இன்று (04) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், பயணிகள் தமக்கான முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சுமார் இரண்டரை மாதங்களுக்கு பின்னர் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமையால், தொடருந்து கடவைகளை கடப்பவர்கள் பாதுகாப்பாக கடக்குமாறும், தொடருந்து பாதைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 11 மணி நேரம் முன்
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam