இலங்கையில் இரவில் நடந்த மர்ம சம்பவம்! திடீரென யாருமின்றி நகர்ந்து சென்ற தொடருந்து - ஆபத்திலிருந்து தப்பிய மக்கள்
குருணாகல் தொடரூந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த களனி குமாரி என பிரபலமாக அழைக்கப்படும் தொடருந்து, ஓட்டுநர் எவருமில்லாமல் தானாகவே முன்னோக்கி நகர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மீனகயா அதிவேக தொடருந்துடன் அது மோதவிருந்த பெரும் விபத்து தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி இரவு 9.30 மணிக்கும் 10.00 மணிக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த எதிர்பாராத விபத்து பதிவாகியுள்ளது.
சிறப்பு விசாரணை
இந்த சம்பவம் குறித்து தொடருந்து திணைக்களம் தற்போது சிறப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

மறுநாள் காலை குருணாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த இந்த தொடருந்து, வழக்கம் போல இரவு நேரத்தில் தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது தொடரூந்தின் பிரேக் செயலிழந்ததால், அது எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி பொத்துஹெர திசையை நோக்கி தானாகவே நகரத் தொடங்கியுள்ளது.
தொடருந்து நிலையத்தில் எவருமின்றி தொடரூந்து முன்னோக்கி சுமார் 100 மீட்டர் தூரம் சென்ற பின்னரே அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
உடனடியாக செயல்பட்ட தொடருந்து நிலைய அதிபர் உள்ளிட்ட ஊழியர்கள் தொடரூந்தை நிறுத்த கடுமையாக முயற்சித்த போதிலும், அது தோல்வியடைந்தன.
தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து
கட்டுப்பாடின்றி நகர்ந்த இந்த தொடரூந்து, குருணாகல் தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள நைலிய தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள மலை போன்ற மேடான பகுதியில் ஏறி தானாகவே நின்றுள்ளது.

அந்தச் நேரத்தில் கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மீனகயா அதிவேக தொடருந்து, பொத்துஹெர தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு மீண்டும் குருணாகலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.
நிலைமையை உணர்ந்த பொத்துஹெர மற்றும் குருணாகல் தொடருந்து நிலைய அதிபர்களும், தொடருந்து திணைக்களத்தின் பிரதான செயல்பாட்டு அலுவலக அதிகாரிகளும் உடனடியாக செயல்பட்டு, தொலைபேசி மூலம் மீனகயா தொடருந்தின் ஓட்டுநரைத் தொடர்பு கொண்டனர்.
தகவல் கிடைத்தவுடன் உடனடியாக செயல்பட்ட ஓட்டுநர், களனி குமாரி தொடருந்துக்கு மிக அருகில் மீனகயா தொடருந்தை நிறுத்தியுள்ளார்.
தொடருந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் இந்த உடனடி மற்றும் கூட்டுத் தலையீடு காரணமாகவே ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தொடருந்தில் குறைந்தபட்சம் கை பிரேக் கூட போடப்பட்டிருக்கவில்லை என சந்தேகிக்கப்படுகிறது. அல்லது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நடந்ததா என்பது குறித்தும் தொடருந்து திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
ட்ரம்பின் அந்த முடிவு... நடுங்க வைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள சீனாவின் நாஸ்ட்ராடாமஸ் News Lankasri