அதிகாலை ஏற்பட்ட அனர்த்தம்! ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்தில் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி
புதிய இணைப்பு
எம்பிலிப்பிட்டியாவில் உள்ள ஒரு ஆடைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 22 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்தின் காரணமாக ஏற்பட்ட தீக்காயங்கள் மற்றும் நச்சுப்புகையை சுவாசித்தமை காரணமாக வைத்தியசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதலாம் இணைப்பு
எம்பிலிப்பிட்டியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் (03) திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (3) காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் இரவில் நடந்த மர்ம சம்பவம்! திடீரென யாருமின்றி நகர்ந்து சென்ற தொடருந்து - ஆபத்திலிருந்து தப்பிய மக்கள்
தீப்பரவலுக்கான காரணம்
இந்த தீ விபத்தில் காயமடைந்த சுமார் 15 பேர் சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தீப்பரவலை கட்டுப்படுத்த செவனகல தீயணைப்புத்துறையிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்துள்ளதுடன், தீயணைப்பு படையினர் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri