ஊழல் மோசடி குற்றச்சாட்டில் சிக்குபவர்களை குறி வைக்கும் கும்பல் - தொடரும் மர்ம மரணங்கள்
இலங்கையில் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேளையில், சிலர் மர்மமான முறையில் உயிரிழப்பது ஏன் என ஊடகவியலாளர்கள் அரசாங்கத்திடம் நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் திடீர் மரணத்தை சுட்டிக்காட்டியே ஊடகவியலாளர்கள் இந்தக் கேள்வியை முன்வைத்தனர்.
இந்த ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன பதிலளித்தார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன உயிரை மாய்த்துக் கொண்டமை குறித்த விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
சட்ட நடவடிக்கை
விசாரணைகளின் முடிவிலேயே இதற்கான உண்மையான காரணங்கள் தெரியவரும் நபர் ஒருவர் சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க முடியாத சூழலில் இவ்வாறான முடிவுகளை எடுக்கும் போக்கு காணப்படுகின்றது.

முன்னாள் பொலிஸ் மா அதிபருக்குப் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு இருந்ததா என்பது குறித்த மக்கள் மத்தியில் நிலவும் நியாயமான சந்தேகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் முன்னால் இத்தகைய சந்தேகங்கள் உண்மையானதா இல்லையா என்பது நிரூபிக்கப்படும் வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்துள்ளார்.
ஊழல் மற்றும் குற்றச்செயல்
சமகால அநுர அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊழல் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிரான நடவடிக்கை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

குறித்த ஆறு பேரும் முன்னாள் ஆட்சியாளர்களான மகிந்த ராஜபக்சர்களுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan