நாட்டில் பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள தொடருந்து விபத்துக்கள்
யாழ்ப்பாணத்தில் தொடருந்து விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
யாழ்ப்பாணம் - கந்தர்மடம் பகுதியிலேயே இன்று(14) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தொடருந்து விபத்து சம்பவம்
கந்தர்மட பகுதியில் இருந்த தொடருந்து கடவையில் இன்று மதியம் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு - காங்கேசன்துறை
தொடருந்து தடம் புரண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த யாழ். தேவா தொடருந்தே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
பயணிகள் பாதிப்பில்லை
இந்த சம்பவமானது இன்று (14) காலை 10.50 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
தொடருந்து சேதம்
ஆனால் தொடருந்து பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.