தொடருந்துடன் மோதிய மோட்டார்சைக்கிள்: தாய்க்கும் இரு குழந்தைகளுக்கும் நேர்ந்த பரிதாபம்
ஆராச்சிக்கட்டுவ, மையாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (19.02.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
தொடருந்துடன் மோட்டார்சைக்களில் மோதியதில் பெண்ணொருவரும் இரு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
விசாரணை முன்னெடுப்பு
தனது குழந்தையையும் மற்றுமொரு குழந்தையையும் பயிற்சி வகுப்புக்கு அழைத்துச் சென்ற தாய் பயணித்த மோட்டார்சைக்கிளே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராய்ச்சிகட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |