குடும்பத் தகராறில் இரண்டு பிள்ளைகளின் தந்தை எடுத்த விபரீத முடிவு (Photos)
புத்தளம் - கடையாக்குளம் பகுதியில் 2 பிள்ளைகளின் தந்தையொருவர் குடும்பத் தகராறு காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (19.04.2023) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தற்கொலை செய்த நபர் 38 வயதுடைய நுவரெலியா ஈட்டன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் புத்தளம், கடையாக்குளம் பகுதியில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
விசாரணை
குடும்பத் தகராறு காரணமாகவே கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு புத்தளம் கற்பிட்டி வலய திடீர் மரண விசாரணை அதிகாரி சென்று சடத்தைப் பார்வையிட்ட பின்னர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் கூறியுள்ளனர்.






