யாழில் சோகம் : உணவருந்த வீட்டுக்கு சென்றவர் உயிரிழப்பு
யாழில் உணவருந்த வீட்டுக்கு சென்ற நபர் ஒருவர் வீதியில் வாகனம் மோதி உயிரிழந்துள்ளார்.
நயினாதீவு 8ஆம் வட்டாரத்தை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பாலேஸ்வரன் (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீதியை கடக்க முற்பட்டவேளை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கோண்டாவில் டிப்போவில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வருகின்றார்.
நயினாதீவு பகுதியைச் சேர்ந்த இவர் கோண்டாவில் பகுதியில், பணி நிமித்தம் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்றையதினம்(12) மதிய உணவுக்காக துவிச்சக்கர வண்டியில் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு நோக்கி சென்றுகொண்டு இருந்தார்.
கோண்டாவில் உள்ள உணவகத்துக்கு அருகாமையில் வீதியை கடக்க முற்பட்டவேளை வீதியால் வந்த வான் அவர் மீது மோதியதில் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 12 மணி நேரம் முன்

தன்னம்பிக்கையை இழக்காமல்.., ஐந்தாவது முயற்சியில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண் News Lankasri
