யாழில் பாடசாலையொன்றில் சிறுமிக்கு நேர்ந்த துயரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு (VIDEO)
இலங்கையின் பல பகுதிகளில் சில குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.
அதன்படி நாட்டின் பல இடங்களில் தொடர்ச்சியாக துஷ்பிரயோக சம்பவங்களும் பதிவாகி கொண்டு தான் இருக்கின்றன.
யாழ்ப்பாணம், சித்தங்கேணியிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் ஆசிரியை ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட ஆசிரியை மல்லாகம் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 10 ஆம் திகதி மாணவி அடித்துத் துன்புறுத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பான விரிவான தகவல்களுடன் கடந்த வாரம் நாட்டில் பதிவான சில குற்றச்செயல்களின் தொகுப்பை காணொளியாக பார்க்கலாம்,