முச்சக்கர வண்டிகள் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் எடுத்துள்ள நடவடிக்கை
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால், அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால் மாத்திரமே முச்சக்கர வண்டிகளில் மாற்றங்கள் மற்றும் அலங்காரங்கள் அனுமதிக்கப்படும் என்று பொலிஸ் திணைக்களம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கான உதவி பொலிஸ் அதிபர் இந்திக்க ஹபுகொட இதனை தெரிவித்துள்ளார்.
பதிவுப் புத்தகம்
முச்சக்கர வண்டியில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அது வாகனத்தின் பதிவுப் புத்தகத்தில் அதன் அசல் மாதிரியை மாற்றாமல் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

முச்சக்கர வண்டி சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, 2023 ஜூலை 7ஆம் திகதி முதல் முச்சக்கர வண்டிகளில் குறிப்பிட்ட மாற்றங்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அங்கீகரித்து வருவதாக டி.ஐ.ஜி ஹபுகொட குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சைரன்கள், வர்ண விளக்குகள், அதிக ஒலி எழுப்பும் ஹோர்ன்கள் மற்றும் சட்டவிரோதமாகக் கருதப்படும் பிற மாற்றங்கள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்படாத பாகங்களை அகற்றுவதற்காக, ஓட்டுநர்களுக்கு 2025 ஜனவரி 19ஆம் திகதி வரை சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan