கொழும்பில் குறைந்த மக்கள் நடமாட்டம்! இதுதான் காரணம்
கொழும்பில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும் பல பகுதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களில் இருந்து வந்து கொழும்பில் தங்கியிருக்கும் மக்கள் பண்டிகைக்காக தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளமையே இதற்கு காரணமாகும்.
இந்நிலையில் கொழும்பின் காலி முகத்திடல் பகுதியில் மயில்கள் சுதந்திரமாக நடமாடும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
வாகன நெரிசல்
இருப்பினும், தெற்கு அதிவேக வீதியில் காலி நோக்கி செல்லும் வீதியில் இன்று (14) கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 8 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri