பொது விடுமுறை தினத்தில் கட்டுப்படுத்தப்படும் போக்குவரத்துச் சேவை
அரசால் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட புதன்கிழமைகளில் பொதுப் போக்குவரத்து சேவைகள் கட்டுப்படுத்தப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதன்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பதாலும், மாணவர்கள் பள்ளிகளுக்கு வராததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
மேலும், அந்த நாட்களில் பயணத்தைக் குறைக்குமாறு தனியார் துறைக்கும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. முடிந்தவரை தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகளைச் செயல்படுத்துமாறு தனியார் துறை நிறுவனங்களை வலியுறுத்தி, இலங்கை வர்த்தக சபை மற்றும் இலங்கை முதலாளிகள் கூட்டமைப்புடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இது பொதுப் போக்குவரத்திற்கான தேவையை கணிசமாகக் குறைப்பதற்கான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக, பொதுப் போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என்றும் பொதுமக்கள் அத்தியாவசியப் பயணங்களுக்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருத்துவமனைகளுக்குச் செல்வது போன்ற முக்கியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
அத்துடன், பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட புதன்கிழமைகளில் எதிர்பார்க்கப்படும் குறைந்த நடமாட்டத்திற்கு ஏற்ப, வரையறுக்கப்பட்ட போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதே இந்தக் கட்டுப்பாடுகளின் நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam