கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா!
கிளிநொச்சியில் (Kilinochchi) மரபுசார் உணவு திருவிழா இன்று (22) காலை 10.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது கிளிநொச்சி பசுமைப் பூங்கா வளாகத்தில் "மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து" எனும் தொனிப்பொருளில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
பாரம்பரிய உணவு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உணவுகளை உள்ளடக்கிய கண்காட்சி
இங்கு பாரம்பரிய உணவுகளை உள்ளடக்கிய கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை தயாரிக்கும் முறையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையியின் பிரதிப் பணிப்பாளர் தயாளினி, கிளிநொச்சி மாவட்ட சித்த ஆதார வைத்தியசாலையியின் மருத்துவ அத்தியட்சகர் அ.அரவிந்தன், கரைச்சி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri
