சட்டவிரோதமான முறையில் பெட்ரோல் விற்பனை: வர்த்தகர் ஒருவர் கைது(Video)
சட்டவிரோதமான முறையில் பெட்ரோலை பதுக்கி வைத்து வியாபாரம் செய்த வர்த்தகர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் நேற்று(30) மாலை கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து ஒரு தொகை பெட்ரோலை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எஸ்.ஏ.றஹீம் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விற்பனை
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் பணிப்புரையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குற்றத்தடுப்பு பொலிஸாரால் நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது காத்தான்குடி பிரதேச வர்த்தக நிலையமொன்றிலிருந்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
கைது செயயப்பட்ட நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.