நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டிற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 530,746 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டும் 37,768 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எண்ணிக்கை அதிகரிப்பு
இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 232,341 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களில் ரஷ்யாவில் இருந்து 29,241 பேரும், இந்தியாவிலிருந்து 34,006 பேரும்,பிரித்தானியாவில் இருந்து 24,830 பேரும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam