வெளிநாடொன்றில் 44 பயணிகளுடன் கடலில் மூழ்கிய கப்பல்!
எகிப்து- செங்கடல் பகுதியில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற நீர்மூழ்கி கப்பலொன்று கடலில் மூழ்கியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது இன்று காலை (27) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளை சேர்ந்த 44 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த சிந்துபாத் என்ற நீர்மூழ்கியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஆறுபேர் பலி
இந்த நீர்மூழ்கிக் கப்பல், பவளப்பாறைகளைப் பார்ப்பதற்காக வழக்கமான சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 44 பயணிகள் குறித்த கப்பலில் இருந்துள்ளதுடன் அதில் 06 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 09 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பலரின் நிலை மோசமானதாக காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த நவம்பரில், செங்கடலில் ஒரு சுற்றுலாப் படகு மூழ்கியதாக எகிப்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
