சுற்றுலா பயணியால் ஏற்பட்ட குழப்பம்..! வழிகாட்டிக்கு நேர்ந்த கொடூரம்
களுத்துறையில் சுற்றுலா வழிகாட்டி ஒருவரை கத்தியால் குத்திய சக வழிகாட்டி ஒருவர் நேற்று(16.04.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளை பகிர்ந்து கொள்வதில் வழிகாட்டிகளுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடா வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடைய சுற்றுலா வழிகாட்டியே இவ்வாறு கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இதுகுறித்து அவர் பொலிஸாரிடம் விளக்கம் அளிக்கையில், தான் வழிகாட்டிய சுற்றுலாப் பயணி ஒருவரை சந்தேகநபரான மற்றுமொரு வழிகாட்டி கவர்ந்து விட்டதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து, சந்தேகநபரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அவர் தன்னை கத்தியால் குத்தியதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்காகிய நபர் தற்போது சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 21 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri