சுற்றுலா பயணிகள் வருகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!
இலங்கைக்கு இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 23 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நேற்று (26) வரையான காலப்பகுதியில் சுமார் 2,320,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 2,258,202 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள்
இவ்வாறு வருகை தந்தவர்களில் அதிகமானோர் இந்தியப் பிரஜைகளாக இருப்பதுடன் இரண்டாம் இடத்தில் பிரித்தானியாவும், மூன்றாவது இடத்தில் ஜேர்மனியும், ஐந்தாவது இடத்தில் சீனாவும் உள்ளன.

அந்தவகையில், இந்தியாவில் இருந்து 510,133 பேரும், பிரித்தானியாவில் இருந்து 204,703 பேரும்,ஜேர்மனியில் இருந்து 141,941 பேரும் மற்றும் சீனாவில் இருந்து 129,403 பேரும் வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, டிசம்பர் மாதத்தின் முதல் 21 நாட்களில் மட்டும் 154,609 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.