மீண்டுமொரு சித்திரவதை முகாம்.. சிஐடியால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்
களனி - கோனாவல பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு சித்திரவதை முகாமை பேலியகொட பொலிஸார் சுற்றி வளைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இந்த சித்திரவதை முகாமின் செயற்பாட்டாளர்கள் துபாயிலிருந்து கம்பஹா மாவட்டத்திற்கு போதைப்பொருட்களை விநியோகித்து வருவதாக குற்றபுலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சித்திரவதை முகாம்
குறித்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு போதைப்பொருட்களை கடனாக வழங்கி, பின்னர் கடனை செலுத்தாத இளைஞர்களை இந்த சித்திரவதைக் கூடத்திற்கு அழைத்து வந்து கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

சிறிது காலமாக அவர்கள் செய்து வரும் இந்த கொடூரமான செயல் குறித்து அப்பகுதிவாசிகள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, பேலியகொட பொலிஸார் அப்பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, சித்திரவதை செய்யப்பட்டிருந்த இரண்டு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்ய முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மூன்று நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பேலியகொட பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெளிநாட்டில் உள்ளவர்கள்...
போதைப்பொருள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய இளைஞர்களை அந்தப் பகுதியில் உள்ள காலியான நிலத்திற்கு அழைத்து வந்து பின்னர் சித்திரவதை செய்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த குத்தகைக்கு விடப்பட்ட நிலப்பகுதி தற்போது அமெரிக்காவில் வசிக்கும் இரண்டு தொழிலதிபர்களுக்கு சொந்தமானது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டு தொழிலதிபர்களுக்கும் இது தொடர்பாக ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam