வெளிநாடு செல்ல அரச நிதி கோரியுள்ள இலங்கை மத்திய வங்கியின் உயர் அதிகாரி! வெளியாகியுள்ள தகவல்
இலங்கை அரசாங்கத்தின் சில உயர்மட்ட அலுவலகங்களில் அரச இயந்திரங்கள் சீராக இயங்குவதை உறுதி செய்ய சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அண்மையில் அரசாங்கம் உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.
புதிய திட்டங்களுக்கு நிதி இல்லை
இதன்படி, திறைசேரியால் அங்கீகரிக்கப்பட்டதைத் தவிர வேறு எந்த புதிய திட்டங்களுக்கும் நிதியளிக்கப்படாது என்பது தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
நிலையான பொறிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் செலவுகளை தாங்களாகவே நிர்வகிப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும் என்றும் அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

வெளிநாடு செல்ல அரச நிதி கோரும் அதிகாரி
இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் அடுத்த மாதம் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தின் செலவுகளை ஈடுகட்ட 6.2 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்துவதற்கு நாணய சபையிடம் அனுமதி கோரியுள்ளார்.
எனினும் அதற்கன ஒப்புதல் இன்னும் வழங்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த அதிகாரி ஏற்கனவே மத்திய வங்கியின் சிறப்பு கொடுப்பனவுகளை பெற்றவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
ஜனநாயகன் ஆதரவாக குரல் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்! சென்சார் போர்டு, பாஜகவுக்கு எதிராக பதிவு Cineulagam
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri