நாளைய போராட்டம்! பேருந்துகளை வழங்குவது தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எடுத்துள்ள தீர்மானம்
அரசாங்கத்திற்கு எதிரப்பு தெரிவித்து நாளைய தினம் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பொதுமக்கள் இந்த போராட்டங்களில் கலந்து கொள்வதற்காக தலைநகரம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
பேருந்துகள் இல்லை..

இந்த நிலையில், நாளைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள மக்களுக்கு தமது சங்கத்தின் பேருந்துகளை வழங்கப்போவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், நாளைய தினம் போராட்டங்கள் மேற்கொள்ள ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று இரவில் இருந்து மறு அறிவித்தல் வரை கொழும்பின் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam