மீண்டும் சூடு பிடிக்கும் கோட்டா கோ கம போராட்டக் களம்! ஒன்றுகூடியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள்
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு காலி முகத்திடலில் இரண்டு மாத காலத்திற்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தற்போது மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
இதன்படி, தற்சமயம் பல்லாயிரக்கணக்கான மக்கள் காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம போராட்டக் களத்தில் குழுமியிருப்பதாக தெரியவருகின்றது.
மீண்டும் சூடு பிடிக்கும் போராட்டக் களம்

தொடர்ந்து அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் சுமை காரணமாக இலங்கை மக்கள் கடும் அதிருப்தி நிலையை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மக்கள் கடும் கொதிநிலையை அடைந்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் நாளையும் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்களை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தற்போது கொழும்பு காலி முகத்திடலை நோக்கி பெருந்திரளான மக்கள் வருகைத் தருவதாகவும் தற்போதுவரை அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியிருப்பதாகவும் தெரியவருகின்றது.
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam