இலங்கையில் தீவிரமடைந்துள்ள மழை! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
இலங்கையில் மழையுடன் கூடிய காலநிலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழைவீழ்ச்சி தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்கள், இரத்தினபுரி, களுத்துறை, நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் மழை பெய்யக்கூடும் என்று முன்னறிவிப்பு சுட்டிக்காட்டுகிறது. இதனால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், வானிலை முன்னறிவிப்புகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் வானிலை தொடர்பான பிற சம்பவங்களுக்கு தயாராக இருக்குமாறும், மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri