வடக்கினை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றுவதற்கு முயற்சி: வடக்கு கடற்றொழிலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

Sri Lanka Northern Province of Sri Lanka Sri Lanka Fisherman
By Kajinthan Feb 11, 2024 03:49 PM GMT
Report

இலங்கையை அல்லது வடபகுதியை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் முகமட் ஆலம் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம்(11.02.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடல் வழிப் போக்குவரத்து

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தியாவுக்கும் இலங்கைக்கும், அதாவது sea of Sri Lanka என்று சொல்லப்படுகின்ற கடல் பரப்பை ஊடறுத்து ஒரு கடல் வழிப் பாதையை உருவாக்கி அதை இந்தியாவிடம் தாரை வார்க்கக் கூடிய ஒரு செயற்பாட்டை ஊடக வாயிலாக அறிகின்றோம்.

இரு மடங்காக அதிகரித்த 100 ரூபாவின் பெறுமதி : குறையும் வருமானம்

இரு மடங்காக அதிகரித்த 100 ரூபாவின் பெறுமதி : குறையும் வருமானம்


இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலே பாலம் அமைப்பது தொடர்பாக இலங்கை ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் இடையிலே ஒரு பேச்சுவார்த்தை இடம்பெற்று, அந்த தீர்மானங்களும் எட்டப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாக அறியக் கூடியதாக இருக்கின்றது.

உண்மையிலேயே இந்த இலங்கை இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினையை கையாளுவதினை இலங்கை ஒட்டுமொத்தமாக கைவிட்ட நிலையில் இந்தியாவின் ஆதிக்கத்தை இலங்கை கடற்பரப்பிற்குள், அதிலும் குறிப்பாக வடக்கு கடற்பரப்பிற்குள் நிலைநாட்டி வருகின்றது.

வடக்கினை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றுவதற்கு முயற்சி: வடக்கு கடற்றொழிலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு | Today Jaffna Fishermen Press Meet

ஸ்டாலினின் கடிதம்

கிட்டத்தட்ட 25 தொடக்கம் 30 வருடங்களாக இந்த கடலில் நாங்கள் இருக்கின்றோம், இந்தக் கடல் எங்களது கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்பதை காட்டிக் கொள்வதற்காகவே அவர்கள் இந்த படகுகளை இலங்கை கடற்பரப்புக்குள் அனுப்புகின்றார்கள்.

அந்த விடயத்தை வைத்து இலங்கை கடற்பரப்பு இந்தியாவுக்கு சொந்தமானது என்று வாதிட பார்க்கின்றார்கள். 

வடக்கினை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றுவதற்கு முயற்சி: வடக்கு கடற்றொழிலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு | Today Jaffna Fishermen Press Meet

அதில் ஒரு அங்கமாக தமிழக படகுகள் இங்கே வருவது, அவர்களுக்கான விடுதலையை வலியுறுத்தி ஸ்டாலின் கடிதம் எழுதுவது, அதை இலங்கை அரசு சாதகமாக பரிசீலித்து இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிப்பது என்பதன் தொடர்கதையின் அடுத்த கட்டம் தான் இந்த கடல் வழிப்பாதை.

பாதையை அமைப்பது அதனை கையாள்வது யார் என்று கேள்விக்கு அப்பால், முற்றுமுழுதாக இந்திய நலன் சார்ந்ததாகத்தான் அது இருக்கப் போகின்றது.

வடக்கினை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றுவதற்கு முயற்சி: வடக்கு கடற்றொழிலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு | Today Jaffna Fishermen Press Meet

இலங்கை - இந்தியாவிற்கு இடையில் பாலம்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் போடப்படுகின்ற அந்த பாலம் வடமாகாணத்தை இந்தியாவின் ஒரு மாநிலமாக ஆக்கப் போகின்றது என்பது மாத்திரம் உண்மை. 

வடக்கினை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றுவதற்கு முயற்சி: வடக்கு கடற்றொழிலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு | Today Jaffna Fishermen Press Meet

இதனை எதிர்காலத்தில் நாங்கள் அல்லது எங்களது சந்ததியினர் உணர்ந்து கொள்வார்கள் என்பதை கூறிக் கொள்கின்றேன்.

எனவே இலங்கை இன்னும் இதே நிலைப்பாட்டில் இருக்குமாக இருந்தால் இந்த நாடு துண்டு துண்டாக உடைவதையும், இந்த நாடு துண்டு துண்டாக ஒவ்வொரு நாட்டுக்கு பங்குகளாக பிரிக்கப்படுவதையும் யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும்.

வடக்கினை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றுவதற்கு முயற்சி: வடக்கு கடற்றொழிலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு | Today Jaffna Fishermen Press Meet

எனவே இனி வரும் காலங்களில் இருக்கின்ற புத்திஜீவிகள் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் ”என தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சொகுசு வாகனங்கள் இரகசியமாக பதிவு

சொகுசு வாகனங்கள் இரகசியமாக பதிவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US