கொரோனா தடுப்பு ஊசி மருந்து முதலில் யாருக்கு வழங்கப்படும்
உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு வழங்கவுள்ள கொரோனா நோய் தடுப்பு ஊசி மருந்து முதலில் நோய் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும் ஆபத்தில் இருக்கும் நபர்களுக்கு வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், நீரிழிவு, இருதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்ற நோய்களுடன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி ஆபத்தான நிலைமைக்கு செல்லக் கூடிய நபர்களுக்கு முதலில் இந்த ஊசி மருந்து வழங்கப்படும்.
இரண்டாவதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டு நோய் தொற்று ஆபத்தை எதிர்நோக்கும் பணிகளில் ஈடுபடும் சுகாதார ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். இலங்கை சனத்தொகையில் 5 இல் ஒரு சத வீதத்தினருக்கு இந்த ஊசி மருந்தை வழங்க முடியும். இந்த ஊசி மருந்தை 2021 வருடத்திற்குள் இலங்கைக்கு இலவசமாக வழங்க உலக சுகாதார அமைப்பு இணங்கியுள்ளது எனவும் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.