ஆட்சிப் பிழைப்பு நடத்தும் ஆளும் தரப்பே நாட்டில் உள்ளது: எதிர்க்கட்சி தலைவர் காட்டம்
சமூக சேவை மற்றும் அரசியலுக்கு வந்தது தாம் மக்களை ஏமாற்றுவதற்காக அல்ல என்றபடியால், கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தை கட்டுப்படுத்த நீரேற்று நிலையங்களை அமைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
அண்மையில் பெய்த கடும் மழையினால் களனி கங்கையை அண்டிய மற்றும் கொலன்னாவ பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் விசாரிப்பதற்காக கொலன்னாவ பிரதேசத்திற்கு இன்று(06) விஜயம் மேற்கொண்ட வேளையிலயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்தவுடன் அதிகாரத்தைப் பெற்று ஆட்சிப் பிழைப்பு நடத்தும் ஆட்சியாளர்களே தற்போதுவரை இருந்து வருகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள்
ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அதிகாரம் இல்லாமலே நாட்டிற்கு பெறுமதி சேர்த்துள்ளனர்.
அதிகாரம் கிடைத்த பின்னர் மக்களை ஏமாற்றாமல் இந்தப் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
