அநுர அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதில் தமிழ்த் தேசியக் கட்சிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அண்மைய பல கூட்டங்களில், அரசாங்கம் வழங்கும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற கருத்து கூறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை மத்திய அரசாங்கத்தில் இணையக்கூடாது என்ற கருத்தும் நிலவுகிறது.
மக்களின் தேவைகள்
எவ்வாறாயினும், அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையல்ல என்று சுட்டிக்காட்டிய சுமந்திரன், அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கினால் அதுபற்றி பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், அமைச்சுப் பதவிகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடாது எனத் தெரிவித்த அவர், பயனுள்ள வேலைத்திட்டம் முன்வைக்கப்படும் போது அனைவரும் ஒன்றிணைந்து செயற்படமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

அதே நேரத்தில், மோசடி மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படமுடியும் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam