டயர் கொள்வனவில் மோசடி! சிக்கிய பொலிஸ் சாரதி
குருநாகல் நகர் பிரதேசத்தில் பொலிஸ் பேருந்து ஒன்றுக்கு வாங்கப்பட்ட புதிய வாகன டயரொன்றை திருட்டுத்தனமாக விற்பனை செய்த பொலிஸ் சாரதியொருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிலையமொன்றின் பேருந்துக்கு பழைய டயரை மாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட புதிய டயரை திருட்டுத்தனமாக பொலிஸ் சாரதியொருவர் விற்பனை செய்துள்ளார்.
புதிதாக கொண்டுவரப்பட்ட டயர் திருகோணமலை பகுதியில் உள்ள மீன் லொறி சாரதி ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும், பொலிஸ் பேருந்தின் பழைய டயருக்கு பதில் மீள்நிரப்பப்பட்ட சக்கரமொன்றை பொருத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
குருநாகல் குற்றப்புலனாய்வு பிரிவு
குருநாகல் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அனில் பிரியந்தவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குருநாகல் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று களமிறக்கப்பட்ட விசாரணையின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri
