டயர் கொள்வனவில் மோசடி! சிக்கிய பொலிஸ் சாரதி
குருநாகல் நகர் பிரதேசத்தில் பொலிஸ் பேருந்து ஒன்றுக்கு வாங்கப்பட்ட புதிய வாகன டயரொன்றை திருட்டுத்தனமாக விற்பனை செய்த பொலிஸ் சாரதியொருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிலையமொன்றின் பேருந்துக்கு பழைய டயரை மாற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட புதிய டயரை திருட்டுத்தனமாக பொலிஸ் சாரதியொருவர் விற்பனை செய்துள்ளார்.
புதிதாக கொண்டுவரப்பட்ட டயர் திருகோணமலை பகுதியில் உள்ள மீன் லொறி சாரதி ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும், பொலிஸ் பேருந்தின் பழைய டயருக்கு பதில் மீள்நிரப்பப்பட்ட சக்கரமொன்றை பொருத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

குருநாகல் குற்றப்புலனாய்வு பிரிவு
குருநாகல் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அனில் பிரியந்தவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குருநாகல் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று களமிறக்கப்பட்ட விசாரணையின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri