கொழும்பில் தமிழ் மக்களை மட்டும் பொலிஸார் பதிவு செய்யவில்லை: அமைச்சர் டிரான் அலஸ்
கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மக்களை மட்டும் பொலிஸார் பதிவு செய்யவில்லை என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நாடாளுமன்றில் பொய்யுரைப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், தமிழ் மக்கள் மட்டும் பதிவுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதனை பல தடவைகள் மனோ கணேசனுக்கு தாம் விளக்கியுள்ளாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
90% சனத்தொகை பதிவு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு மாவட்டத்தில் 90 வீதமான சனத்தொகையினர் பதிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த பதிவு நடவடிக்கை தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களையும் உள்ளடக்கியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்த பொலிஸ் பதிவு நடவடிக்கை இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டது அல்ல எனவும், போர் காலத்திலும் அதன் பின்னரும் மேற்கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மனோ கணேசன் அமைச்சராக பதவி வகித்த அரசாங்கத்திலும் பொலிஸ் பதிவு மேற்கொள்ளப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல் ஒன்றை மேற்கொண்டு கொழும்பில் வந்து மறைந்திருக்கும் நபர்கள் பற்றிய தகவல்களை திரட்டும் நோக்கில் இந்த பதிவு மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மதம் தொடர்பிலான விபரங்கள் கோரப்படுவதில்லை என அமைச்சர் டிரான் அலஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam