இரட்டை குடியுரிமை உடைய எவரும் நாடாளுமன்றில் இல்லை: டிரான் விளக்கம்
இரட்டை குடியுரிமையுடைய எவரும் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்(Tiran Alles) தெரிவித்துள்ளார்.
இலங்கை குடிவரவு குடியாகல்வு திணைக்களத்தின் தகவல்களுக்கு அமைய இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“எவ்வாறாயினும் வெளிநாடு குடியுரிமையை பெற்றுக்கொண்டவர்கள் இலங்கை பிரஜை என்ற போர்வையில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்க கூடும்.
இரட்டை குடியுரிமை
இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்குகின்றது.

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை குடியுரிமையை வகிக்கின்றார்களா என பெபரல் அமைப்பு தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் ஊடாக கேள்வி எழுப்பியிருந்தது.
எனினும் இந்த கேள்விக்கு இதுவரை பதில் அளிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு ஒருவர் இரட்டை குடியுரிமையைப் பெற்றுக் கொண்டிருந்தால் அல்லது அதற்காக விண்ணப்பம் செய்திருந்தால் குடிவர குடியகல்வு திணைக்களத்திற்கு தெரிந்திருக்கும்.
இதன்படி, இலங்கை குடிவரவு குடியரசு திணைக்களத்தின் தகவல்களின் பிரகாரம் எவரும் இரட்டை குடியுரிமை பெற்றுக் கொள்ளவில்லை.” என அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam