இலங்கையின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வரிக் கோப்புகளை தயாரிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது: சம்பிக்கவின் விளக்கம்
இலங்கையின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வரிக் கோப்புகளை தயாரிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
அறிக்கையொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தேவைப்படும் நேரம்
அந்த அறிக்கையில் மேலும், தேவையான அனைத்து அளவுகோல்களையும் கருத்திற் கொண்டு, ஒரு வரிக் கோப்பினைச் செயலாக்குவதற்கு தோராயமாக அரை மணித்தியாலங்கள் தேவைப்படுகிறது.
ஒன்பது அதிகாரிகள் மட்டுமே இந்தப் பொறுப்பில் பணிபுரிவதால், தினசரி செயலாக்கத் திறன் 144 கோப்புகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மில்லியன் கணக்கான கோப்புகளை செயலாக்குவது கடினமான மற்றும் நேரத்தைச் செலவழிக்கும் முயற்சியாகும்.

ஒவ்வொரு தனிநபருக்கும் புதிய வரிக் கோப்புகளைத் திறப்பதை விட உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் அடையாளம் காணப்பட்ட 1272 கடனை செலுத்தாதவர்களிடமிருந்து செலுத்தப்படாத வரிகளை வசூலிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மக்கள் மீது தேவையற்ற சுமை
எவ்வாறாயினும், இது தொடர்பாக தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததால், மக்கள் மீது தேவையற்ற சுமை மற்றும் நடைமுறைக்கு மாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மக்களின் பரிவர்த்தனைகளை துல்லியமாக கண்காணிக்க QR குறியீடுகள் போன்ற நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்த வேண்டும். எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கான QR குறியீடுகள் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டதை ஒரு முன்னுதாரணமாகும்.

இதேபோன்ற நடவடிக்கைகள் மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களுக்கும் நீடிக்கப்படலாம். QR குறியீடுகளை பரவலாக ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதன் மூலம், பரிவர்த்தனைகள் மற்றும் அவற்றின் மதிப்புகள் பற்றிய துல்லியமான தரவை அரசாங்கம் பெற முடியும்.
மேலும் முறைப்படுத்தப்பட்ட வரி வசூல் செயல்முறையை எளிதாக்குகிறது. தொழிநுட்ப தீர்வுகளை ஏற்றுக் கொள்வது வினைத்திறனை அதிகரிப்பது மட்டுமன்றி மிகவும் வெளிப்படையான மற்றும் பொறுப்பு கூறக் கூடிய வரிவிதிப்பு முறைமைக்கு பங்களிப்புச் செய்யும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan