ரணிலிற்கு பசில் வழங்கிய காலக்கெடு - கொதிநிலைக்குள் கொழும்பின் அரசியல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர்; பசில் ராஜபக்சவுக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்படிக்கையை, கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க தனது தீர்மானத்தை முதலில் அறிவிக்க வேண்டும் எனவும், அதன் பின்னர் பொதுஜன பெரமுன தனது நிலைப்பாட்டை ஜூன் 16ஆம் திகதியன்று அறிவிக்கும் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 25 பேர் தமக்கு ஆதரவளிப்பதாக பசிலுடனான சந்திப்பின்போது ரணில் குறிப்பிட்டுள்ளார்.
ரணிலுக்கு ஆதரவு
எனவே அவர்களை தம்பக்கம் வர வைப்பதற்காக ஜூன் 15 வரை அவகாசம் வழங்குமாறு ரணில், பசிலிடம் கோரியுள்ளார்.
இதன்போது பதிலளித்துள்ள பசில், எதிர்க்கட்சியின் 25 உறுப்பினர்கள், ரணிலுக்கு ஆதரவளித்தால், தமது கட்சியும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிக்கும் என்று உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ரணிலின் மதிப்பிட்ட எண்ணிக்கை அதிகம் என்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் 10 முதல்; 12 உறுப்பினர்களே ரணிலுக்கு ஆதரவளிப்பர் என்றும் எதிர்க்கட்சி தரப்பில் இருந்து தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் ரணிலுக்கு ஆதரவு வழங்குவோரின் கோரிக்கைககள் தொடர்பில் அவர்களுடன், ரணில் தரப்பினால்; உடன்படிக்கைகளும் செய்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இல் இணையுங்கள் JOIN NOW |





மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
