வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு
வவுனியா (Vavuniya), மரக்காரம்பளையில் மரக்கடத்தல் ஒன்றினை முறியடித்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த முறியடிப்பு நடவடிக்கை இன்று (09) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக மரங்களை ஏற்றிச் சென்ற ஜீப் ரக வாகனத்தை நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திவுல்வெவ தலைமையிலான போக்குவரத்து பொலிஸார் சோதனை செய்த போது சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான 72 மரங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன
மேலதிக விசாரணை
அத்துடன், மரக்கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப் ரக வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர், நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam