வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு
வவுனியா (Vavuniya), மரக்காரம்பளையில் மரக்கடத்தல் ஒன்றினை முறியடித்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த முறியடிப்பு நடவடிக்கை இன்று (09) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக மரங்களை ஏற்றிச் சென்ற ஜீப் ரக வாகனத்தை நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திவுல்வெவ தலைமையிலான போக்குவரத்து பொலிஸார் சோதனை செய்த போது சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான 72 மரங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன
மேலதிக விசாரணை
அத்துடன், மரக்கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப் ரக வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர், நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
