இறுக்கமடையும் கெடுபிடிகள்! யாழ். பல்கலையிலும் அஞ்சலி நிகழ்வு
தடைகளைத் தாண்டி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நடத்தப்படும் என்பதால் நேற்று பிற்பகல் தொடக்கம் பல்கலைக்கழக சூழலில் இராணுவம் மற்றும் பொலிஸ் குவிக்கப்பட்டு இருந்ததுடன் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அத்துடன் பல்கலைக்கழக மாணவர்கள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தடைகளை தாண்டி பல்கலைக்கழக மாணவர்களால், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.