முள்ளிவாய்க்கால் நினைவுநாளின் பின் நிலை தடுமாறும் புலனாய்வுதுறை
வவுனியாவில் நினைவெழுச்சி செய்வதற்கான மேடையை தயார்படுத்த முற்பட்ட போது உடனடியாக புலனாய்வுதுறையினர் அங்கிருந்தவர்களை கைது செய்து விட்டு பின்னர் அவர்கள் மீது என்ன குற்றம் சாட்டலாம் என யோசித்துள்ளனர் என்று பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“இலங்கை புலனாய்வுதுறை தமிழர்களை எப்பொழுதும் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கின்றது.
அனைத்துலக சர்வதேச ஊடகங்களும் தமிழ் மக்கள் மீது பார்வையை திருப்பியுள்ளார்கள் என்பதை இலங்கை புலனாய்வுதுறை அறிந்துள்ளது” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக விளக்குகின்றது இன்றைய ஊடறுப்பு....
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri