கடுமையான இடி மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு கடுமையான இடி மின்னல் தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் இந்த அறிவிப்பு இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடையிடையே இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது, இந்தப் பகுதிகளில் தற்காலிகமாக கடுமையான காற்று வீச வாய்ப்புள்ளது.
இடி மின்னலால் ஏற்படும் ஆபத்துகளை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri