முச்சக்கர வண்டியொன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து : நால்வர் காயம்
பதுளை(Badulla) - மஹியங்கனை பிரதான வீதியில் மீகஹகிவுல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று (20.06.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மீகஹகிவுலயிலிருந்து பொல்கஹராவ நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
முச்சக்கரவண்டியின் சாரதி தனிப்பட்ட தேவைக்காக கடை ஒன்றிற்கு அருகில் முச்சக்கரவண்டியை நிறுத்தி விட்டு வெளியே சென்ற போது, முச்சக்கரவண்டியானது சாரதியின்றி நகர்ந்து சென்று 30 அடி ஆழமுடைய கால்வாயொன்றில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் இருந்த மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam