நானுஓயாவில் முச்சக்கர வண்டி விபத்து : இருவர் காயம்
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (17.06.2024) காலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
நானுஓயாவில் இருந்து ஹட்டன் (Hatton)நோக்கி பயணம் மேற்கொண்ட முச்சக்கரவண்டி மிகவும் சரிவான ரதல்ல குறுக்கு வீதியின் அபாயகரமான வளைவில் சாரதிக்கு முச்சக்கரவண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |