மூதூரில் மாணவர்களுக்கு அடிப்படைவாதத்தை போதித்த நபர் கைது
திருகோணமலை - முதூர் பிரதேசத்தில் மாணவர்களுக்கு அடிப்படைவாதத்தை போதித்த நபர் ஒருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தரத்தில் கற்கும் மாணவர்களுக்கு குறித்த நபர் அடிப்படைவாதத்தை போதித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மூதூர் இக்பால் வீதியைச் சேர்ந்த 38 வயதான நபரையே பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டில் இந்த அடிப்படைவாத வகுப்புக்கள் நடாத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குறித்த நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.