கப்பம் பெற முயற்சித்த விமானப்படையை சேர்ந்த மூவர் கைது
புத்தளம் - கற்பிட்டி, கல்குடா பிரதேசத்தில் இரண்டு பேரிடம் ஒரு இலட்சம் ரூபாய் கப்பம் பெற முயற்சித்த, விமானப்படையை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் பாலாவி விமானப்படை முகாமில் கடமையாற்றும் விமானப்படை சிப்பாய்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அடையாளம் காணும் அணிவகுப்பில் நிறுத்தப்படவுள்ளனர்.
இதனிடையே மோட்டார்சைக்கிளில் சென்று பெண்ணொருவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இருவர் கடவத்தை எண்டேரமுல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து கைக்குண்டு, ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் இரண்டு தங்கச் சங்கிலிகள் என்பவற்றை கைப்பற்றியதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri