புதிய கட்சிகளை பதிவு செய்த மூன்று அரசியல் தலைவர்கள்
மூன்று புதிய அரசியல் கட்சிளை பதிவு செய்ய அனுமதி வழங்கியதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி, புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளே இவ்வாறு புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Rathnayake) தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் (C.V. Wigneswaran) தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம (Kumara welgama) தலைமையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தவிர மலையக அரசியல் கட்சிகளை கொண்ட மனோ கணேசன் (Mano Ganeshan) தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியும் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த கட்சிகளுடன் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam