அவசரமாக திருப்பி அனுப்பப்பட்ட கட்டுநாயக்கா வந்த விமானங்கள் - வெளியான காரணம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்ட மூன்று விமானங்கள் மத்தள விமான நிலையம் மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
இன்று (19) காலை நிலவிய கடும் பனி காரணமாக விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
சீனாவின் குவாங்சோவிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-881 மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து வந்த UL-266 விமானம் திருப்பி விடப்பட்டுள்ளன.

விமான செயல்பாடுகளுக்கு இடையூறு
கூடுதலாக, சவுதி அரேபியாவின் தம்மத்திலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-254 இந்தியாவின் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
காலை விமான செயல்பாடுகளுக்கு இடையூறாக இருந்த பனி தற்போது நீங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |