சஜித்தை இயக்கும் மூன்று பேர் - பரபரப்பாகும் கொழும்பு அரசியல்
தென்னிலங்கை அரசியலில் மீண்டும் கட்சி தாவும் படலம் ஆரம்பித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு 10 உறுப்பினர்கள் செல்லவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு நெருக்கமானவர்களின் செயற்பாடுகளின் காரணமாகவே இந்த 10 பேர் ஐக்கிய தேசிய கட்சிக்கு செல்ல தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சமகால அரசாங்கத்திற்கு தொடர்புடைய நபர் ஒருவரும், பெண் ஒருவரும் மற்றுமொரு நபர் ஒருவருமே இவ்வாறு சஜித் பிரேமதாஸவை இயக்குவதாக இந்த 10 பேர் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாகவே தாங்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக குறித்த 10 பேரும் குறிப்பிட்டுள்ளார்கள் என குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam