கொள்ளை சம்பவம் தொடர்பாக மூவர் கைது:ஒருவர் காலிமுகத்திடல் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டவர்
வர்த்தகர் ஒருவரின கழுத்தை நெறித்து, அவரிடம் இருந்த பையை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய மேல் மாகாண தெற்கு குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸாரின் விசாரணைகளுக்கு அமைய சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பையில் பணம் இருக்கும் என்று எண்ணி அதனை கொள்ளையிட்டதாக சந்தேக நபர்கள் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காலிமுகத்திடல் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட நபர்
இந்த சந்தேக நபர்களில் ஒருவர் காலிமுகத்திடல் போராட்டத்தில் சம்பந்தப்பட்ட செயற்பாட்டாளர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றுக்குள் சென்றமை, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் புஷ்பகுமார மற்றும் மொறட்டுவை மேயரின் வீட்டின் மீதான தாக்குதல் ஆகிய சம்பவங்களுடன் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளவர் என தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.